நடிகர்கள் : ஜெய், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், பிரசன்னா, சிநேகா மற்றும் பலர்.
இயக்குனர் : வெங்கட் பிரபு
இசை: யுவன் சங்கர் ராஜா

மூன்று இளைங்கர்கள் ஊரை வெறுக்கிறார்கள் . மதுரை செல்ல அங்கு தன் நண்பன் ஒருவரை சந்திகிறார்கள் மாப்பிளையாக, மணப்பெண் வெள்ளைக்காரி. மூவரும் அதிர்ச்சியில் குடிக்கிறார்கள். பிறகு தன் நண்பனை சந்தித்து பேசுகிறார்கள். அவன் கோவாவில் வேலை பார்பவதாகவும் அங்கு வெள்ளைக்காரி பெண்ணை காதல் செய்து இப்பொழுது கல்யாணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆக போவதாக சொல்ல, மூவரும் கோவா செல்ல தீர்மானிக்கிறார்கள். கல்யாணத்தில் பிரேம்ஜி ஒரு வெள்ளைகாரியை காண்கிறார் அவளிடம் காதல் வசம் படுகிறார். இந்த காட்சி காமெடியாக செல்கிறது.
மூவரும் கோவா நோக்கி செல்கிறார்கள் லாரி உதவியுடன். கோவாவை அடைந்ததும் பாடல் ஆரம்பம் ஆகுகிறது. இந்த பாடல் சுமார் தான் படலை குடும்பத்தோட பார்க்க முடியாது அரை ஆடை பெண்கள், உள்ளாடை பெண்கள் தான் பாடலில் அதிகம். வெள்ளைக்காரி பெண்கள், குடி, கும்மாளம், பார், கடி காமடி என்று படம்மெதுவாக நகர்கிறது.
தற்செயலாக ஒரு தமிழ் இளைங்கனை சந்திகிறார்கள் (அரவிந்த் ). அரவிந்த் அடைக்கலம் தர முன்வருகிறார். மூவரும் தன் இலட்சியத்தை சொல்கிறார்கள். இதற்க்கு அரவிந்த் மற்றும் தன் ஓரின சேர்க்கை நண்பர் சேர்ந்து உதவுகிறார்கள். இந்த அணியில் ஒரு பாடகி சேர்கிறாள். மூவரையும் இப்பழுது உள்ள கலாச்சாரத்துக்கு கொண்டு வருகிறார்கள் இவர்களின் முடி திருத்த படுகிறது, ஆடைகள் அலங்காரம் செய்ய படுகிறது, ஆங்கிலமும் கற்று தரபடுகிறது. ஜெய் தன் பாடல் அழகியை காதல் செய்கிறார் இப்படியே முதல் பாதி போலீஸ் வருகையில் முடிகிறது.

கடைசியில் பிரேம்ஜி தன் வெள்ளைக்காரி காதலியை கல்யாணம் செய்கிறார், ஜெய் பாடல் பாடும் தோழியை கரம் பிடிக்கிறார். மூவரும் ஊர் திரும்புகிறார்கள் அங்கு நயன்தாரா வைபுவிர்க்கு காத்திருக்கிறார். சிநேகா சிலம்பரசன் மன்மதன் பாணியில் முடிகிறது படம் . இரண்டாம் பாதி மிக கடியில் முடிகிறது, அரங்கமே வருத்ததுடன் வெளியில் செல்கிறது .

யுவன் சங்கர் ராஜா பாடல்கள் சில சுமார் மூன்று பாடல்கள் விசில், கைதட்டல் வங்கயுள்ளது. பின்னணி இசை சூப்பர். திரைக்கதை, வசனம், நடனம் இல்லை.
மொத்தத்தில் "கோவா இளைங்கர்கள் மட்டும் பார்க்கும் படம்"