Sunday, January 31, 2010

கோவா படம் விமர்சனம்

படம் : "கோவா"
நடிகர்கள் : ஜெய், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், பிரசன்னா, சிநேகா மற்றும் பலர்.
இயக்குனர் : வெங்கட் பிரபு
இசை: யுவன் சங்கர் ராஜா நீங்கள் நல்ல கதை விரும்பியா இல்லை குடும்ப தலைவனா ! என்றால் இந்த படத்தை தவிர்க்கலாம். இது ஒரு காமெடி கலந்த மசாலா திரைப்படம். கதை இளையராஜா பாடலுடன் ஆரம்பம். பாடல் கிராமத்தை தழுவயுள்ளது. பாடல் வரிகள் சூப்பர் நல்ல கிராமிய பாடல் கைதட்டல் விசில் பறக்கிறது அரங்கத்தில். முதலில் கிராமத்தை கட்டுகிறார் இயக்குனர். பஞ்சாயத்துடன் ஆரம்பம், மூன்று இளைங்கர்கள் ( ஜெய், பிரேம்ஜி, வைபவ் ) இவர்கள் மூவரும் நண்பர்கள். பிரேம்ஜி சாமியார் ! ஜெய் வெளிநாட்டு கலாச்சார விரும்பி !! வைபவ் பண்ணையார் மகன் !!! . பஞ்சாயத்தில் இவர்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்படுகிறது . அடுத்த காட்சி கிராமத்து பாடலுடன் முடிகிறது. இந்த பாடல் நாட்டுபுற பாடல். பாடல் சுமார் தான் .

மூன்று இளைங்கர்கள் ஊரை வெறுக்கிறார்கள் . மதுரை செல்ல அங்கு தன் நண்பன் ஒருவரை சந்திகிறார்கள் மாப்பிளையாக, மணப்பெண் வெள்ளைக்காரி. மூவரும் அதிர்ச்சியில் குடிக்கிறார்கள். பிறகு தன் நண்பனை சந்தித்து பேசுகிறார்கள். அவன் கோவாவில் வேலை பார்பவதாகவும் அங்கு வெள்ளைக்காரி பெண்ணை காதல் செய்து இப்பொழுது கல்யாணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆக போவதாக சொல்ல, மூவரும் கோவா செல்ல தீர்மானிக்கிறார்கள். கல்யாணத்தில் பிரேம்ஜி ஒரு வெள்ளைகாரியை காண்கிறார் அவளிடம் காதல் வசம் படுகிறார். இந்த காட்சி காமெடியாக செல்கிறது.

மூவரும் கோவா நோக்கி செல்கிறார்கள் லாரி உதவியுடன். கோவாவை அடைந்ததும் பாடல் ஆரம்பம் ஆகுகிறது. இந்த பாடல் சுமார் தான் படலை குடும்பத்தோட பார்க்க முடியாது அரை ஆடை பெண்கள், உள்ளாடை பெண்கள் தான் பாடலில் அதிகம். வெள்ளைக்காரி பெண்கள், குடி, கும்மாளம், பார், கடி காமடி என்று படம்மெதுவாக நகர்கிறது.

தற்செயலாக ஒரு தமிழ் இளைங்கனை சந்திகிறார்கள் (அரவிந்த் ). அரவிந்த் அடைக்கலம் தர முன்வருகிறார். மூவரும் தன் இலட்சியத்தை சொல்கிறார்கள். இதற்க்கு அரவிந்த் மற்றும் தன் ஓரின சேர்க்கை நண்பர் சேர்ந்து உதவுகிறார்கள். இந்த அணியில் ஒரு பாடகி சேர்கிறாள். மூவரையும் இப்பழுது உள்ள கலாச்சாரத்துக்கு கொண்டு வருகிறார்கள் இவர்களின் முடி திருத்த படுகிறது, ஆடைகள் அலங்காரம் செய்ய படுகிறது, ஆங்கிலமும் கற்று தரபடுகிறது. ஜெய் தன் பாடல் அழகியை காதல் செய்கிறார் இப்படியே முதல் பாதி போலீஸ் வருகையில் முடிகிறது. இரண்டாம் பாதி சொல்லும்படி ஒன்றும் இல்லை. பிரேம்ஜி தன் காதலியை கோவாவில் சந்திகிறார் இருவரும் காதல் வசபடுகிறார்கள். அரவிந்த் தன் ஓரின சேர்கை நண்பரை சந்தேகம் படல். பாடல், குடி, கும்மாளம், பார், வைபவ் சிநேகா காதல் கல்யாணம் இப்படியே நகர்கிறது கதை. சிநேகா ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்று தெருகிறது பிரசன்னா உதவியுடன் வைபவக்கு . சிநேகா கொடுமை. சிநேகாமிக தாரளமாக நடித்துள்ளார்.

கடைசியில் பிரேம்ஜி தன் வெள்ளைக்காரி காதலியை கல்யாணம் செய்கிறார், ஜெய் பாடல் பாடும் தோழியை கரம் பிடிக்கிறார். மூவரும் ஊர் திரும்புகிறார்கள் அங்கு நயன்தாரா வைபுவிர்க்கு காத்திருக்கிறார். சிநேகா சிலம்பரசன் மன்மதன் பாணியில் முடிகிறது படம் . இரண்டாம் பாதி மிக கடியில் முடிகிறது, அரங்கமே வருத்ததுடன் வெளியில் செல்கிறது . இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 28 , சரோஜா, போன்ற நல்ல படங்களை குடுத்து இந்த படத்தில் நம் எதிர்பார்பிக்கு சற்று தடுமாற்றம். இவர் ஏதோ ஒரு படத்தை எடுத்துள்ளார். படத்தில் சொல்லும்படி எந்த விசியம் இல்லை. கோவா ஒரு இளைஞன் சென்றால் இப்படி இருக்கலாம் என்று சொல்கிறார் ஆனால் நிலைமை வேறு. தமிழ் கலாச்சாரம் எங்கே என்று தெரிய வில்லை. பிளாஷ் பேக் அடிக்கடி வருவதால் நமக்கு சலிப்பு தான் . இவர் பழைய பாடல் சேர்க்கையை விட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

யுவன் சங்கர் ராஜா பாடல்கள் சில சுமார் மூன்று பாடல்கள் விசில், கைதட்டல் வங்கயுள்ளது. பின்னணி இசை சூப்பர். திரைக்கதை, வசனம், நடனம் இல்லை.

மொத்தத்தில் "கோவா இளைங்கர்கள் மட்டும் பார்க்கும் படம்"

Saturday, January 30, 2010

தமிழ் படம் விமர்சனம்

படம் : " தமிழ் படம் "

நடிகர்கள் :" சிவா, திஷா பண்டே, வெண்ணிறாடை மூர்த்தி, M S பாஸ்கர், மனோபாலன், பறவை முனியம்மா மற்றும் பலர் .

இயக்குனர் : " C S அமுதன்"

இசை : " கண்ணன் "
இது ஒரு வித்யாசியமான திரைப்படம் . பல தமிழ் படங்களை வைத்து கதை உருவாகி உள்ளது . கதை ஒரு குடிசையில் ஆரம்பம் ஆகுகிறது காமெடியாக. அதே வேகத்தில் செல்கிறது சென்னை நகரத்துக்கு. சிறுவன் சிவா ( கதாநாயகன் ) தன் எதிர் முன்னே ஒரு அநியாயம் நடக்கிறது அதை தன் பாட்டியிடம் முறையிடுகிறார் பக்கத்தில் இருக்கும் சைக்கிள் மிதித்து பெரியவனாகுகிறார். அநியாயத்தை தட்டி கேட்கிறார். சண்டை ஆரம்பம் ஆகுகிறது இந்த சண்டைக்கு கைதட்டல் விசில் பறக்கிறது. சண்டை முடிந்ததும் பாட்டு , இந்த பாட்டில் அவர் போடும் நாட்டியம் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால் சிவா பேசும் வசனம் நம்மை கடிக்க செய்கிறது. பாட்டு முடிந்ததும் வில்லன் வருகிறார். வில்லன் உரையாடல் தளபதி படத்தின் மம்முட்டியின் நகலை காண்பித்து இருக்கிறார்கள், ஆனால் காமெடி இல்லை .

வெண்ணிறாடை மூர்த்தி, M S பாஸ்கர், மனோபாலன் மற்றும் சிவா நண்பர்கள், இவர்களை சிறுவர்கள் போல் சித்தரித்துள்ளார் இயக்குனர். படம் பாட்டு, சண்டை, சொர்ணக்கா வில்லி கொடூர கொலை இப்படியே செல்கிறது கதை .

படம் என்றாள் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருப்பார்கள். கதாநாயகி அறிமுகம் வித்தியாசமாக உள்ளது . பிறகு என்ன சிவா, திஷா பண்டேவிடம் (கதாநாயகி ) காதல் வசம் படுகிறார். பிறகு இருவரும் காதல் செய்கிறார்கள், சொல்லவே வேண்டாம் பாடல் தான் ! காதல் பாடலில் வரிகள் இல்லை ஆனால் பாடல் நம்மை ரசிக்கும் படியாக உள்ளது. சில சில இடங்களில் வில்லன்களை சிவா கொலை செய்கிறார். என்ன என்று தெரிய வில்லை. இப்படியே காமெடியாக விரு விருப்பாக செல்கிறது முதல் பாதி கதை .
இரண்டாம் பாதியில் கதாநாயகின் அப்பா பணக்காரன், அதனால் பணக்கார மாப்பிளைக்கு தான் தன் மகளை கல்யாணம் செய்து கொடுப்பேன் என்று சொல்ல, ஒரே பாட்டில் பணகாரனாகுகிறார் சிவா. சிவா திஷா பண்டே கல்யாணம் செய்ய முன்வருகிறார்கள். அப்பொழுது சிவாவிற்கு தெரிகிறது தான் அனாதை என்று. கிராமத்தை நோக்கி செல்கிறார் தன் குடும்பத்தை கண்டு பிடிக்க. இந்த காட்சியில் இயக்குனர் நம்மை சிரிக்க வைக்க முயல்கிறார் ஆனால் நமக்கு சிரிப்பு வரவில்லை கடியாக தான் உள்ளத்து. காட்சிகள் நகர, தன் குடும்பத்தை கண்டு பிடிக்கிறார். இந்த இடங்களில் படம் மெதுவாக செல்கிறது, வில்லனை தேடி செல்கிறார் இடையில் வில்லன் அடியாள்களை கொள்கிறார் காமெடியாக, இதற்கிடையில் போலீஸ் அதிகாரியாக சிவா மாறுகிறார் மூன்று எழுத்து நடிகரை மிக மோசமாக ஓட்டி இருக்கிறார்.

கடைசியில் வில்லனை விட்லாசாரியார் படம் போல் ஒரு, ஒரு தடைகளை கடந்து (நெருப்பு, காற்று ,....) கண்டு பிடிக்கிறார். பார்த்தால் தான் நேசித்த ஒருவர் இந்த காட்சி நம்மளை சிரிக்க வைக்க இயக்குனர் நினைத்து இருக்கறார் நமக்கு சலிப்பு தான் மிஞ்சுது. வில்லியை அழைத்துகொண்டு நீதி மன்றம் வருகிறார் அப்பொழுது தன் சக போலீஸ் அதிகாரியை நீதிபதி முன் சுட்டு கொள்கிறார் . வில்லி மற்றும் சிவா இருவரும் சிறையடிக்க படுகிறார்கள்.

சந்திரமுகி, காக்க காக்க , விரும்பாண்டி, நாயகன், கஜினி ..... படத்தின் நகலை காண்பித்து இருக்கிறார் இயக்குனர் மிக காமெடியாக .

படம் இறுதியில் சிவா மற்றும் வில்லி இருவரும் நிரபராதி என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். படம் இத்துடன் முடிகிறது.இயக்குனர் C S அமுதன் நல்ல விரு விருப்பாக முதல் பாதியை நகத்தி, இரண்டாம் பாதியில் கதை சொல்லறது போல் காட்டி படத்தின் விரு விருப்பை குறைத்து கதையும் இல்லாமல், காமெடியையும் இல்லாமல் நம்மளை சலிக்க வைத்து உள்ளார். இயக்குனர் முதல் பாதியில் செலுத்திய கவனத்தை இரண்டாம் பாதியில் செலுத்தி இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

கண்ணனின் இசையில் இரு பாடல்கள் நம்மை ரசிக்கும் படி உள்ளது கைதட்டல்யும் வாங்கி உள்ளார். மத்த பாடல்களில் அரங்கத்தில் ஆள் இல்லை. பின்னணி இசை சுமார் தான்.

கேமரா சுத்தி சுத்தி விஜய் படத்திற்கும் எப்படி விளையடுமோ அதே போல் விளையாடி இருக்கிறது. திரைக்கதையில் கவனம் கொஞ்சம் நன்றாக செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் "தமிழ் படம் ஒரு கலவை கலந்த தமிழ் படம் "!!!!!

Sunday, January 24, 2010

aayirathil oruvan tamil review

செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இடமுண்டு. துள்ளவதோ இளமை பாடல்களைக் கேட்டு விட்டு அதை டிவியில் பார்த்த போது எரிச்சலாக இருந்தது இவனெல்லாம் ஒரு ஹீரோ என சலிப்பு வேறு. அந்தக் கடுப்பில் படமே பார்க்கவில்லை. 2003 ஆம் வருடம் அதே ஹீரோ நடித்து ஒரு படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அந்தப் படத்தைப் போய் பார்த்தேன் பார்த்த நாளில் இருந்து தனுஷ் என் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். இவனைப் பிடிக்காது என்ற முன் முடிவுடன் படம் பார்க்கச் சென்றவனைஅவரது ரசிகனாக்கிய திறமைக்கு சொந்தக்காரர் செல்வராகவனே. இதோ கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என போக்குக் காட்டிய செல்வராகவனின் புதியப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன். நிச்சயமாக தமிழிலே இது ஒரு புதிய முயற்சி. செல்வராகவன் படங்களில் என்னவெல்லாம் நாம் எதிர்ப்பார்ப்போமோ, என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது ஆனால் முற்றிலும் புதிய களத்தில். கிபி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. சோழ பாண்டிய மன்னரிடையே ஏற்படும் போர் உக்கிரமடைய சோழ இளவரசன் பெரும் படை புடைசூழ குறித்த சிலரோடு பெயரறியா தீவொன்றைச் சென்றடைகிறான். அவனைப் பின்தொடரும் ஒரு பாண்டிய நாட்டவனின் குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளின் ஆதாரத்தோடு அந்த சோழன் தஞ்சமடைந்த இடத்தை கண்டறிய முயலும் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் முயற்சியே ஆயிரத்தில் ஒருவன். தொல்பொருள் ஆய்வுக்குழுவின் தலைவி ரீமா சென், ஏலவே இப்பணியில் ஈடுப்பட்ட தன தந்தையைப் பறிக்கொடுத்த அண்ட்ரியா, இராணுவ உதவி வழங்கும் அழகம் பெருமாள் இவர்களோடு தன குழுவினருடன் பயணத்தில் இணைந்துக் கொள்ளும் போர்ட்டர் கார்த்தி. இவர்களே பிரதானப் பாத்திரங்கள். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். என்ன இன்னமும் பருத்தி வீரன் தாக்கம் இவரை விட்டுப் போகவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்டைலை மாற்றுங்கள் கார்த்தி. செல்வராகவன் படங்களில் வழமையாக கதாநாயகி சோகம் ததும்ப வலம் வருவார். இதிலே அண்ட்ரியா அந்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். அழகம் பெருமாள் வழமைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்த்திபன் சஸ்பென்சில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் படம் வெளிவரும் வரை ஸ்டில் ஒன்று கூட வெளியிடப்படவில்லை. நானும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை ஆடியோ ரிலீசில் பார்த்திபன் பேசிய அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன். அடுத்தது ரீமா சென் பார்க்க அத்தனை அழகாய் இருக்க மாட்டார். முதிர்ச்சி தட்டிய முகம். ஒரு ஆண் போன்ற பாவனைகள் இவரா கிடைத்தார் செல்வராகவனுக்கு என நானும் யோசித்தேன். இதற்கெல்லாம் தன நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் ரீமா. முதல் படத்திலேயே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட கார்த்தி, 25 வருடத்திற்கு மேலே நடிப்பனுபவம் கொண்ட பார்த்திபன் எல்லாமே இவர் நடிப்புக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு அசத்துகிறார் ரீமா சென். ரீமா தவிர்ந்து இன்னுமொருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடுங்கள் விட்டால் ரீமா சென்னுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவேன். உண்மையை சொன்னால் சிம்ரனுக்கு பிறகு எந்தப் பாத்திரம் என்றாலும் செய்யக் கூடியவர் இவராயத்தான் இருக்கும். இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஏலவே ஹிட் ஆயிற்றே. பின்னணி இசையிலும் பெரிதாக குறை வைக்கவில்லை. பார்த்திபனும் ரீமா சென்னும் ஆவேசமாய் சண்டையிடுவார்கள் திடிரென ரீமா அவரை வேறு விதமாக சீண்ட அது ஒரு சிருங்கார விளையாட்டாக மாறும் அவ்விடத்தில் பிரகாஷின் இசை அருமை மாமாவின் பெயரைக் காப்பாற்றி விடுவார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானதொன்று. அமெச்சூர் தனமான சில கிராபிக் காட்சிகளின் குறையை மறைப்பதிலும் சோழப் பேரரசு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை. செல்வாவுக்கு தன மேல் நம்பிக்கையும் தன படைப்புக்களில் காதலும் அதிகம் என நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ எடிட்டருக்கு வேலையே வைக்கவில்லை. சில இடங்களில் கத்தரி வைத்திருந்தாள் கச்சிதமாய் இருந்திருக்கும். தான் ஒரு நல்ல இயக்குனரா என்று தனக்குத் தெரியவில்லை எனினும் தான் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் எனவும் செல்வா ஒரு முறை பேட்டியளித்திருந்தார். ஆனால் இங்கே திரைக்கதை அத்தனை நேர்த்தியாய் இல்லை. சில வேளை இவர் நினைத்ததைப் படமாக்க சிரமமாய் இருந்திருக்கலாம். படத்தில் இவர்கள் பட்ட சிரமம் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது. தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும். ஆக சில குறைகள் இருந்தாலும் தமிழின் புதிய முயற்சி என்ற வகையில் இதற்கு கொடுக்கப்படும் ஆதரவு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன். படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு. படம் பார்த்தோருக்குப் புரிந்திருக்கும். அதை இங்கே விளக்கினால் சுவாரசியம் கேட்டு விடுமென்பதால் விட்டு விடுகிறேன். நான் மேலே சொன்ன கதை சுருக்கத்தை வைத்து நீங்கள் ஒரு கதையை ஊகித்திருப்பினும் இடைவேளைக்குப் பின் வரும் ட்விஸ்ட் நான் சற்றும் எதிர்பாராதது. உங்களுக்கும் அப்படியே இருக்கும். சோ தயவு செய்து தியேட்டரில் போய்ப் பார்த்து இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். போகும் போது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு போதல் நலம். என்னை கேட்டால் 14 வயதுக்கு மேலுள்ளோர் பார்க்கலாம் என்பேன்.

Tuesday, October 27, 2009

Agni Nakshatram

Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Karthik Muthuraman Prabhu Ganesan Vijayakumar Amala Nirosha Jayachitra V. K. Ramaswamy Janagaraj
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films Pyramid Saimira
Release date(s) 1988
Running time 146 mins
Language Tamil
Songs Thoongatha Vizhigal - K. J. Yesudas, S. Janaki Ninnukori Varanam - K. S. Chitra Oru Poonga Vanam - S. Janaki Raaja Raajathi - Ilayaraaja Roja Poo Adivanthathu - S. Janaki Vaa Vaa Anbe Anbe - K. J. Yesudas, K. S. Chitra

Monday, October 26, 2009

Nayagan

Directed by Mani Ratnam
Produced by Mani Ratnam G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Kamal Haasan Saranya Janagaraj Tinnu Anand Delhi Ganesh Nizhalgal Ravi Karthika Nasser Neena
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Release date(s) 1987
Running time 145 mins
Language Tamil
Nayagan-DVD Download movie Part 1 Part 2 Part 3 Part 4 Nayagan-DVD Download songs

Mouna Ragam

Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Karthik Muthuraman Mohan Revathi V. K. Ramasamy
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Release date(s) 1986
Running time 146 mins
Language Tamil
Songs Download

Chinni Chinni Artist(s): Janaki

Oho Meghamocchenu Artist(s): Janaki

Cheli Raava Artist(s): SP. Balasubramaniam

Malle Poola Challa Gaali Artist(s): SP. Balasubramaniam

Tadi Tadi Talapu Artist(s): SP. Balasubramaniam, Janaki

Click Here to download all songs in a single file

Idaya Kovil

Directed by Mani Ratnam
Written by Mani Ratnam
Starring Mohan Radha Ambika Goundamani
Cinematography Rajarajan
Release date(s) 1985
Running time 130 min
Country India
Language Tamil
Ilayaraja Songs 1. Idhayam Oru - S.P.Balasubramaniyam, S. Janaki Download 2. Idhayam Oru 2 - Illayaraja Download 3. Kootathile Koil Pura - Illayaraja Download 4. Naan Paadum - S.P.Balasubramaniam Download 5. Oororama - K.S. Chitra, Illayaraja Download 6. Paatu Thalaivan - S.P.Balasubramaniam, S. Janaki Download 7. Vaanuyarndha - S.P.Balasubramaniam Download 8. Yaar Veetu Roja - S.P.Balasubramaniam Download